இந்தியாவில் தோன்றி இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தாது யோகாவும், பிராணயாமமும் ஒன்று. நான் சென்னையில் இருந்த போது கற்ற பல நல்ல விசயத்தில் இதுவும் ஒன்று. நான் யோகாவை கற்று 8 ஆண்டாகியும், நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது செய்து வருகிறேன். அதன் பயனை இப்போது உணர முடிகிறது. யோகாவின் பயன்களில் கீழ்கண்ட சிலவற்றை கூறலாம்.
1. யோகாவும், பிராணயாமமும் செய்யும் போது இதய துடிப்பு அதிகரித்து இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கிறது. இதனால் உடல் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு உடல் பொழிவு பெறுகிறது.
2. சில ஆசனங்கள் உடலின் இணைப்பு தசைகளை உறுதிப்படுத்துவதால் உடல் வலி மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது
3. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
மேலும் பல பயன்களை செலவில்லாமல் தரும்போது, நாம் அனைவரும் தினமும் செய்தாலென்ன?
மேலும் அறிய,