அற்புதங்கள் ஆயிரம் - சிறுகதை - அமல்

தம்பி திருமணத்திற்கு ஜாமான் வாங்க ஜெனிட்டா கடைக்கு போயாச்சு. இந்த இரண்டு பசங்களை மேய்க்கனுமே.
நான், “ஜெனிட்டா, நாங்க  வீட்டிலிருந்து பீச்க்கு போறோம்”

ஜெனிட்டா, ’எப்படி போறிங்க?, ஆட்டோலயா?’
’இல்ல நடந்துதான் போறம்’
’முடியுமா? 3 கிலோமீட்டர் ஆச்சே?’
’எல்லாம் முடியும், முயற்சி பண்றோம்.’
‘சரி பாத்து போய்ட்டு வாங்க’, ‘பசங்கள பாத்துக்கங்க’
‘ஏய் செருப்ப போடுங்க, கிளம்பலாம்’

கிளம்பும்போது மாலை 3 மணி.
’அப்பா ஜிபிஸ் போட்டாச்சா, எவ்வளவு நேரம் ஆகும்?’
‘போட்டாச்சு, 50 நிமிசம் ஆகும்.’
’அப்பா, இங்க பாருங்க. கார்ல கண்ணாடியும் இல்ல கதவும் இல்ல’
‘இது உடைந்த காருடா, சரி பண்ண வச்சிருக்காங்கட’

’அப்பா அங்க பாருங்க ஸ்னோ பால் புறாக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டு காலி மனையில் கிடந்த குப்பை மேல்  இருந்த பெரிய புறாக்கூட்டத்தில் ஒரு வெள்ளை புறாவை துரத்திக்கொண்டு  ஆல்வின் ஓடினான்.

’அப்பா இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ஆலன் கேட்டான்.’
’40 நிமிடம்டா.’

’அப்பா அங்க பாருங்க லைக்காவோட குட்டி நாய்.’
’இங்க பாருங்க 3 நாய் குட்டிங்க. அப்பா ஒன்னு வீட்டுக்கு எடுத்து போலாமா.’
’வேண்டாம்டா. ’

’அப்பா அங்க பாருங்க எவ்ளோ பெரிய யானை சாமி. ஏப்பா நிறைய சாமி இருக்கு.’
’வெள்ளிக்கிழமை புள்ளையார் சுத்தி வருதுல்ல அதுக்குதாண்டா. சாமிகும்புடுவாங்கள.’

’ஏன் சாமிமேல பெயிண்ட் அடிக்கிராங்க.’
’அப்பாதான அழகா இருப்பாங்க.’

’ஏன் இந்த சாமியெல்லாம் சின்னசின்னதா இருக்கு. அதெல்லாம் பெரிசா இருக்கு.’
’சின்ன சாமியெல்லாம் குறைந்த விலைக்கு விப்பாங்க. பெரிய சாமியெல்லாம் நிறைய விலைக்கு விப்பாங்க.’


’அப்பா இங்க பாருங்க செத்துபோன பெரிச்சாலி நசுங்கி கிடக்கு.’
’ஏய் கிட்ட போகாதிங்க நாறும்.’

’அப்பா மாட்ல பால் கரக்குராங்க பாருங்க.’
ஆல்வின், ‘மாட்டு பின்னாடிதான் கரப்பாங்களா. மாட்டு மூச்சாதான் பாலா. அய்ய.’
’எலே கிட்ட போகாதிங்க.’

’அப்பா இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு.’
’10 நிமிடம்டா.’

’ஏன் இவ்லோ பெரிய ஏணி மாதிரி வச்சிருக்காங்க.’
’வீடு கட்ராங்கள. மேல போய் கட்டனும்ல.’

’அப்பா தண்ணி வேணும்.’
’இந்தா உன்னோட தண்ணி பாட்டில்.’

’அப்பா நாலு காரு இருக்கு பாருங்க.’

’அப்பா கடைல ஐஸ்கிரீம் இருக்கு, சாப்டலாமா.’
’வேண்டாம்டா, கடல முட்டாய், ரொட்டி எடுத்து வந்திருக்கேன் சாப்பிடுரிங்களா.’
’ஆல்வின், ஐய் கல்ல முட்டாய் எனக்கு வேணும்.’



’அப்பா அங்க பாருங்க, கடல்ல தண்ணி தெரியுது.’
’சீக்கிரம் வாங்க விளையாடலாம்.’

’அப்பா நேத்து காலைல நண்டு குஞ்சல்லாம் பிடிச்சம்ல. இப்ப காணோம்.’
’இப்ப சாங்கியாலம் ஆச்சில அதல்லாம் சாப்பிட்டுட்டு தூங்க போயிருக்கும்.


சரி தண்ணி கிட்ட போகாதிங்க. மணல கோயில் கட்டி விளையாடுங்க. ’
’அப்பா தஞ்சாவூர்ல பெரிய கோயில் போனோம்ல, அது மாதிரி கட்டலாமா.’
’சரி கட்டுங்க, எதாவது ஐடியா வேணும்னா கேளுங்க.’
’பக்கத்திலேயே மண் எடுத்து போடாதிங்க. பெரிசா கட்டனும்ல. கொஞ்ச தூரத்திலிருந்து கையால தள்ளிட்டு போங்க.’

கொஞ்ச நேரத்தில பசங்கள் சோர்ந்துவிட்டார்கள்.

’ஏய் தண்ணி வேணுமா.’
ஆலன், ‘வேணுப்பா.’
’கல்ல முட்டாய்.’
’கொடுங்க.’

’சரி நானும் கட்டவா.’
’சரிப்பா வாங்க பெரிசா கட்டலாம்.’

’மண்ணலாம் அள்ளிட்டு வாங்க. நல்லா குமிச்சி வைங்க.’
’கோயில்ல படிபடியா  கட்டனும்ல. ஏதாவது கட்டை இல்லனா குச்சி எடுத்து வாங்க.’

’அப்பா ஒன்னும் காணோப்பா. இந்த செருப்ப வச்சி பண்ணலாமா.’
’சரி நான் செஞ்சி காட்டுறேன். அது மாதிரி செய்யுங்க. ’



ஆல்வின், ’அப்பா கோயிலு என்னோட பெரிசு இருக்கு. ’


’சரி கோயில சுத்தி மதில் சுவர் கட்டுங்க.’
’காம்போண்டாப்பா.’
’ஆமா’
’வாசப்படி வைக்கவா.’
’வைங்க.’
’இதலெல்லாம் என்னடா.’
’மாடு சாமி’
’நந்தியா’
’ஆமாம்’



’சரி நில்லுங்க போட்டோ எடுப்போம்’

’வாங்க , கை காலெல்லாம் அலையில கழுவுவோம்.’

’இந்தா தண்ணி குடிங்க கிளம்புவோம்.’

’செருப்பு போட்டாச்சா.’

’அப்பா இங்க பாருங்க குளத்தில மீன் இருக்கு பிடிக்கலாமா.’

’ரொம்ப பள்ளமா இருக்கு. வேண்டாம்.’

’யாரோ ஒருவர், சார் இதுல கார் போகுமா. ’

’இல்ல சார்  புதுசா போட்ட ரோடு. மழை பேஞ்சு
சேரும் பள்ளமா இருக்கு.’

’சார் கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு போங்க. புது கரும்பு.’

ஆசையாக இருந்தது. இப்பதான் அமெரிக்காவுலேந்து வந்திருக்கிற பசங்களா நினைத்து வேண்டாமென்றேன்.

’இளநீ குடிப்போமா.’

ஆலன், ’அப்பா எனக்கு ரெண்டு வேணும்.’

’முதல ஒன்னு குடி’

’சார் தண்ணியா வழுக்கையா.’

’வழுக்கை’

’சரி வீட்டுக்கு போவோமா மணி 5 ஆயிரிச்சி.’



விண்ட் பிளவர் சொகுசு விடுதி அருகே வரும்போது 3 தமிழ் நாடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

’என்ன சார் கூட்டமா’

’ஆமா தினகரனோட எம்மல்யே எல்லாம் மீட்டிங் போடுராங்க.’

’நல்லா பேசட்டும் சார். ஆடி பதினெட்டுக்குதான் காவிரி ஆத்துல தண்ணி வரல. புள்ளையார் சுத்திக்காகவாது தண்ணி வரட்டும்.’

’சரி சரி சீக்கிரம் கிளம்புங்க.’

’அப்பா ஏப்பா போலீஸெல்லாம் நிக்கிராங்க. திருடங்க இருக்காங்களா. ’

’எலே. சத்தமா சொல்லாதடா.’

’அப்பா அங்க பாருங்க மூனு மாடுங்க வருது.’

’இரு நாய்களுடன் ஒரு அம்மா மாடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.’

’அப்பா நான் பால் கரக்கட்டுமா.’

ஆல்வின், ‘மாட்டுக்கிட்ட போகாத. முட்டும்’

’பின்னாடிதானே போறேன்.’

’உதைக்கும்டா.’

10 நிமிடம் கழித்து மாடுகள் ஒரு தெருவில் திரும்பி சென்றன.

’ஆல்வின், நாம நேரா போகனும்.’

’அப்பா மாட்டெல்லாம் அவங்க வீட்ல விட்டுட்டு வருவோம்.’

’இல்ல நேரமாச்சு. வா போகலாம்’

’அப்பா நடக்க முடியல.’

ஆல்வின் குத்துகாலிட்டு உட்கார்ந்திருந்தான்.

’ஏய் எந்திரி. இன்னும் 10 நிமிடம் தான். வீடு வந்திரும்.’

’முடியலப்பா.’

’சரி இந்தா கல்ல முட்டாய்.’

’இந்தா தண்ணி குடி’

’சரி வா போகலாம்’

5 நிமிடம் கழித்து

ஆல்வின், ‘அப்பா முடிலப்பா.’

’சரி அப்பா மேல உக்காரு’

’ஆல்வின், தூக்க முடியலடா. நடக்கிறியா.’

’சரிப்பா’

வீடு வந்தபோது 6 மணி. சூரியன் மறைந்திருந்தன்.

குளித்துவிட்டு அமர்ந்த போது. ஆல்வின் கேட்டான். நாளைக்கு காலைல கடலுக்கு போயி நண்டு படிப்போமா.
...