What is communication - amazing...




What is that? - To my parents

இனிப்பு நோயின் கசப்பு முகம்

உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

உண்வின் அருமை

சரத்பாபு - ஒரு புதிய நம்பிக்கை

'அரசியல் சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு. நண்பர்களே, நாம் ஓட்டு போடமுடியாவிட்டாலும் ஒவ்வொருவரும் 100பேரையாவது இவருக்கு ஓட்டு போட வைப்போம்.

பகுதி 1


பகுதி 2


இவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள
http://sarathbabu.co.in/in/
http://www.vikatan.com/jv/2009/apr/19042009/jv0303.asp

நாளை இரவு 8.30க்கு விளக்குகளை அணையுங்கள்!: புவி வெப்பமாவதை தடுக்கலாம்.

நாளை இரவு 8.30 - 9.30 வரை ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்கும்படி சர்வதேச வனவிலங்கு நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது. வெப்பமடைந்து வரும் பூமியை காப்பாற்ற இது பெரிய உதவி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே போன்ற விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 35 நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடி பேர் விளக்குகளை அணைத்தனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் இதுபோன்ற முயற்சிகளை பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்த அமைப்பு எடுத்து வருகிறது. சர்வதேச வனவிலங்கு நிதியம், இந்த ஒரு மணி நேரத்தை பூமி நேரம் (எர்த் ஹவர்) என்று பெயரிட்டுள்ளது. இந்த ஆண்டு 1,000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் விளக்குகளை அணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முயற்சிக்கு ஆதரவாக உலகின் முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அறிஞர்கள் மற்றும் நட்சத்திரங்கள் முன் வந்துள்ளனர். இந்தியாவில் இந்தி நடிகர் அமீர் கான் இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், பருவநிலை மாற்றம் தான் தற்போது நம் முன் உள்ள மிகப்பெரிய வருந்தத்தக்க சவால். இது சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, பருவநிலை சீரடைய நடத்தும் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள். பூமி நேரத்தில் விளக்குகளை அணைத்து ஆதரவு தாருங்கள், என்கிறார். இதுபோன்ற சிறிய முயற்சியால் நடக்கப் போவது என்ன? கடந்த 2007ல் சிட்னியில் பரிசோதனை முயற்சிக்காக விளக்குகளை அணைத்தனர். அப்போது 10.2 சதவீத எரிபொருள் சேமிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவைவிட இது, இருமடங்கு சேமிப்பை தந்தது. அத்துடன் வளிமண்டலம் வெப்பமடைய காரணமாக உள்ள கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 28.46 டன் குறைந்தது. இது 48 ஆயிரத்து 613 கார்களை ஒரு மணி நேர அளவுக்கு நிறுத்தி வைத்திருந்ததற்கு சமமாக அமைந்தது. எரிபொருள் செலவில் விளக்குகளுக்கு மட்டும் 5 முதல் 15 சதவீதம் செலவழிக்கிறோம். அலுவலகங்களில் இது 37 சதவீதம் வரை செலவாகிறது. வீணாகும் எரிபொருளை சேமிப்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்த முடியும். அத்துடன் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற முடியும். நாடு முழுவதிலும் மின்தடை அமலில் இருந்தபோதிலும் கூட, இந்த நேரத்தில் விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் தீபங்களுடன் நம் கடமையை நிறைவேற்றலாம். எரிபொருளை மிச்சப்படுத்த கீழ்க்கண்ட விஷயங்களையும் கடைபிடிக்கலாம்.
 * கம்ப்யூட்டர், மின்விசிறி மற்றும் விளக்குகளை உபயோகத்தில் இல்லாத போது அணைக்கலாம்.
 * காகிதங்களை இரு புறங்களும் பயன்படுத்தலாம். தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பிரின்ட் எடுக்கலாம்.
 * ஷேவ் செய்யும் போதும், பல்துலக்கும் போதும் குழாயை நிறுத்திவிடலாம்.
* ஏர்-கண்டிஷனர் வெப்பநிலையை 23-24 டிகிரியிலேயே வைத்திருக்கலாம்.
 * உங்கள் வாகனங்களை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யலாம்.
 * ரீசார்ஜ் செய்யும் பாட்டரிகளை உபயோகப்படுத்தலாம்.
 * குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தலாம்.
 * நீங்கள் பயன்படுத்திய பொருளை குப்பைக்கு அனுப்புவதற்கு முன், அது மற்றவர்களுக்கு பயன்படும் என்றால் அதை கொடுக்கலாம். இது போன்ற சிறு, சிறு முயற்சிகள் பெரிய அளவில் பயன் தரும். நன்றி; தி்ன்மலர்

உடல் நலம் - யோகா

இந்தியாவில் தோன்றி இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தாது யோகாவும், பிராணயாமமும் ஒன்று. நான் சென்னையில் இருந்த போது கற்ற பல நல்ல விசயத்தில் இதுவும் ஒன்று. நான் யோகாவை கற்று 8 ஆண்டாகியும், நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது செய்து வருகிறேன்.  அதன் பயனை இப்போது உணர முடிகிறது.  யோகாவின் பயன்களில் கீழ்கண்ட சிலவற்றை கூறலாம்.

1. யோகாவும், பிராணயாமமும் செய்யும் போது இதய துடிப்பு அதிகரித்து இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கிறது. இதனால் உடல் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு உடல் பொழிவு பெறுகிறது.
2. சில ஆசனங்கள் உடலின் இணைப்பு தசைகளை உறுதிப்படுத்துவதால் உடல் வலி மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது
3. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
 
மேலும் பல பயன்களை செலவில்லாமல் தரும்போது, நாம் அனைவரும் தினமும் செய்தாலென்ன?
மேலும் அறிய,

அர்கன்சாஸ் தமிழ் சங்க விளையாட்டு போட்டிகள் 2008 DVD

நான் சென்ற மூன்று நாட்களாக அர்கன்சாஸ் தமிழ் சங்க விளையாட்டு போட்டிகள் 2008 ன் DVD தயாரிப்பில் இருந்ததால் அதிகமான வேலைகள். சுமார் இரண்டரை மணி நேரம் ஒளி பதிவு செய்யப்பட்ட படத்தை, சரியாக பதியாத படத்தையெல்லாம் வெட்டி பாதியாக குறைத்து, ஒரு மணி 17 நிமிடம் ஓடக்கூடிய படத்தை, அனைத்து பெயர்களும் தமிழிலேயே உருவாக்க சுமார் 14 மணி நேரத்திற்கும்மேல் ஆனது. இந்த DVD ல் பலவேறு தமிழக விளையாட்டுக்கள் அடங்கிய சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் இது நமது இளமை கால நினைவுகளின் பெட்டகமாக இருக்குமென நினைக்கின்றேன். மேலும் விவரங்களுக்கு www.artamilsangam.org யை பார்க்க. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.




புத்தாண்டு வாழ்த்துகள் - 2009