சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி - சிறுகதை - திறனாய்வு

31 Oct 1984 புதன்கிழமை அன்று இந்திராகாந்தி இறந்த நாள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற கொள்கையுடைய இந்தியா முழுவதும் ஒரு பதற்ற நிலை. அப்போது தில்லியில் ஒரு பகுதியில் நடந்த பேரழிவு தான் இந்த கதை, சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி.

நாட்டை காப்பாற்ற உயிர்விட்டவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியாத இயலாமை. அரசியல் அடிபொடிகளின் மனிதாபமற்ற செயலால் மனிதர்கள் மேல் நிகழ்த்திய வெறியாட்டத்தை பதிவுசெய்த கதை இது.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 29 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---


ஜெயகாந்தனின் இல்லாத்து எது - சிறுகதை - திறனாய்வு

மானுடத்தின் பேராற்றலை அருமையாக ஒரு சிறு நிகழ்வின் மூலம் விளக்கும் சிறுகதை இது.

கடவுளை தேடும் ஆஸ்திகன், கடவுளை மறுக்கும் நாத்திகன். கடவுளின் ஆற்றலை அறிய முயலும் விஞ்ஞானி, இந்த மானுடர்களின் அறிவே அவர்களுக்கு பலம். கடவுளின் ஆற்றல் மனிதனின் அறிவை விட பலம் மிக்கதாக இருக்கலாம், ஆனால் அதை அறிய மனிதனால் முடியும். அதை வெல்ல மனிதன் முயன்று கொண்டே இருப்பான். – கடவுளை பற்றிய சிறப்பான விளக்கம்.

பைபிளில் வரும் நோவாவின் பேழை, தமிழர்களின் கல்வெட்டுகள், பனையோலை சுவடிகள் என எல்லாமே அடுத்த தலைமுறைக்கு மனிதனின் அறிவை கடத்திதானே நாம் இன்று இவ்வளவு வளர்ந்துள்ளோம்.

தஞ்சாவூர் சரஸ்வதிமகாலில் உள்ள ஓலைச்சுவடிகளின் மின்னனுவாக்கம், கடவுளின் துகள் (Higgs boson - https://en.wikipedia.org/wiki/Higgs_boson),  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆழ்நீர் தகவல் சேகரிப்பான் (Project Natick- https://natick.research.microsoft.com/) என நாம் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே அடுத்த தலைமுறைக்குத்தானே.

மனிதனின் அறிவால் மரணத்தை வெல்ல முடியாது. ஆனால் மனிதனின் அறிவு தலைமுறை தலைமுறையாக கடந்து செல்லும். அதனால் மானுடம் மரணத்தை வெல்லும். எனவே அவனிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை. – மனிதனை பற்றிய சிறப்பான விளக்கம்.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 08 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0198.pdf