Showing posts with label புலமைபித்தன். Show all posts
Showing posts with label புலமைபித்தன். Show all posts

புலமைபித்தனின் செல்லம்மாள் - சிறுகதை - திறனாய்வு

இரண்டாம் உலகப்போர் உச்சகட்டமாகா இருக்கும்போது வெளியான கதை எழுத்தாளர் புலமைபித்தனின் செல்லம்மாள். உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் போர் நடக்கும் இடங்களுக்கு அனுப்ப பட்டு, இந்தியாவில் பஞ்சம் நிறைந்த காலம் அது.

பிரமநாயகம், கிராமத்தில் முதல் தலைமுறையாக படித்து சென்னையில் குறைந்த ஊதியம் அதிக வேலையுடன் வாழ்பவன்.

செல்லம்மாள், கிராமத்தில் சுற்றத்தாரோடு மகிழ்ச்சியாக கோவில் கோபுரத்தில் வாழும் புறாவாக வாழ்ந்தவள், சென்னையில் ஊரைத்தாண்டிய ஒரு வீட்டில் பிரமநாயகத்துடன் கூண்டு புறாவாக தனிமையில் வாழ்கிறாள்.

அவர்களுக்கு குழந்தையில்லை. அவனுக்கு அவள்தான் குழந்தை,அவளுக்கு அவன்தான் குழந்தை.

பிரமநாயகத்தின் இயலாமை, செல்லமாளின் தனிமை மற்றும் குழந்தையின்மையின் பிரச்சனைகளின் இறுதியில் செல்லம்மாள் நோயில் இறக்கிறாள். மகிழ்ந்திருந்த காலத்தில் குறைந்த எடையாக தெரிந்தவள், இறந்த துக்கத்தில் அவளை தூக்க முடியவில்லை.

கோவில் கோபுரத்தில் வாழும் புறாவாக வாழ்ந்தவள், இப்பொழுது ஊசிகோபுரத்தில் திரிசங்குக்கிரக மண்டலமாக வாழ்கிறாள். இறுதியில் இரட்டை சங்கு முழங்க பிரமநாயகம் செல்லம்மாளுடன் இணைகிறான்.

ஒரு காதல் கதையின் இறுதியில் ஒருநாளில் நடக்கும் கதை. இக்கதை என் வாழ்க்கையின் ஒரு பகுதி. அமெரிக்காவில் வாய்ப்புகள் இருந்ததால் நாங்கள் மீண்டு வந்தோம். ஆனால் கதை எழுதி 60 ஆண்டுகள் கடந்து, அமெரிக்காவிற்கு  H4 விசாவில் வந்த பெரும்பாலானோற்கு உள்ள அனுபவம் இந்த தனிமை. எதிர்காலத்தில் நம் பேரப்பிள்ளைகள் செவ்வாய் கிரகத்துக்கு குடிபோனாலும் இதையே அனுபவிப்பர்.

இந்த கதையை படிக்கும்போது ஊரில் உள்ள வயதான என் அம்மாவின் நினைவு வந்தது. அப்பா மற்றும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதால் ஆறுதல் அடைந்தேன்.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 17 செப்டம்பர் 2020 அன்று வாசித்தது - அமல்

---

புதுமைப்பித்தன் படைப்புகள் - சிறுகதைகள்; தொகுப்பு - 1  - 2. செல்லம்மாள்

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0389_01.pdf